செண்பகவல்லியம்மன் கோவிலின் ஐப்பசி மாத திருவிழா கொடியற்றத்துடன் தொடங்கியது !

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் ஆலயத்தின் ஐப்பசி மாத திருவிழா கொடியற்றத்துடன் தொடங்கியது.

கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் பூவனநாத சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு கணபதி பூஜை, திருவனந்தல், திருப்பள்ளி பூஜைகள் மற்றும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பூவனநாத சுவாமிகள் சன்னிதானம் முன்பு உள்ள கொடிமரத்தில், வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version