விருதுநகர் மாவட்டத்தில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் கருத்தரங்கம்

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சிவஞானம் பங்கேற்று வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். கருத்தரங்கில் ஆசிரியர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.

வாக்களிப்பதன் முக்கியத்துவம், தேர்தலை நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் பதிலளித்தார். மேலும் வாக்களிப்பதற்கு பணம் பெற மாட்டோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய கையெழுத்து இயக்கம் தொடங்கி வைத்தார்.

Exit mobile version