திண்டிவனத்தில் தோட்டக்கலை துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம்

திண்டிவனத்தில் தோட்டக்கலை துறை சார்பில், மாவட்ட அளவிலான காய்கறி உற்பத்தியில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், சார் ஆட்சியர் அனு கலந்துகொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதை அடுத்து, காய்கறி உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்பொழுது, விவசாயிகளுக்காக  தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை விளக்கிக் கூறிய அவர்,  விவசாயிகள் அவற்றை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version