கமல்ஹாசனுக்கு அரசியலின் அரிச்சுவடியே தெரியாது: செல்லூர் ராஜூ

அரவக்குறிச்சி இடைத்தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மகாத்மா காந்தியின் மரணத்தையும் இந்து மதத்தையும் ஒப்பிட்டு பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கமல்ஹாசன் தன் கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் சினிமாவுக்கு செல்லலாம் என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பிரசாரம் செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ கமல்ஹாசனுக்கு அரசியலின் அரிச்சுவடியே தெரியாது எனவும் விமர்சித்தார்.

Exit mobile version