மதுரைக்கு லோயர் கேம்பில் இருந்து குடிநீர் வழங்க ஏற்பாடு: அமைச்சர் செல்லூர் ராஜூ

லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாகவும் இதனால் 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை வராது என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்

மதுரை மாநகராட்சி சார்பில் பெத்தானியாபுரத்தில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பை கூடைகள் மற்றும் பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரைக்கு லோயர் கேம்பில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும், அரசு விளம்பரத்திற்காக பணிகள் செய்யவில்லை எனவும், மக்களுக்காக மட்டுமே பணிகள் செய்வதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version