ஜெயலலிதாவின் மறைவு குறித்துப்பேச ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது : செல்லூர் ராஜூ

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடுத்து, மனஉளைச்சலுக்கு ஆளாக்கி, அவரது இறப்பிற்கு காரணமாக அமைந்தது திமுக தான் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக சாடினார். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பேரூராட்சியில் கூட்டுறவு விற்பனை சங்க கட்டட திறப்புவிழாவில் கலந்து கொண்டபின், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊராட்சி சபைக் கூட்டங்களில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து பேச ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது என விமர்சித்தார்.

Exit mobile version