தமிழக கூட்டுறவுத்துறை மட்டுமே 24 விருதுகளை பெற்றுள்ளது –  அமைச்சர் செல்லூர் ராஜூ 

தனியார் வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகள் நவீனமயமாக்கப்பட்டு உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய அளவில் தமிழக கூட்டுறவுத்துறை மட்டுமே 24 விருதுகளை பெற்றுள்ளதாகக் கூறினார். ஸ்மார்ட் கார்டு கிடைக்காதவர்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள 3 லட்சத்து 25 விவசாயிகளுக்கு, கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். முன்னதாக 65வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் தொடக்க நிகழ்ச்சி, சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதனை, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியேற்றி துவக்கி வைத்தார்.

Exit mobile version