குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகம் முழுவதும் சுமார் 16 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன

தமிழக அரசின் இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 6481 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வை, மாநிலம் முழுவதும் இருந்து 16 லட்சத்து 29 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடத்தப்பட்ட 72 நாட்களில் முடிவுகளை வெளியிட்டு தமிழக அரசின் அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிய சாதனை படைத்துள்ளது.

Exit mobile version