குரூப் 4 தேர்வு முறைகேடு; 20 பேர் விசாரணைக்கு ஆஜர்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக, சம்மன் அனுப்பபட்டவர்கள் விசாரணைக்கு ஆஜராகினர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. அதில் முறைகேடு புகார் எழுந்த நிலையில் மாநில அளவில் முதல் 100 இடங்களில் தேர்ச்சி பெற்ற 57 பேருக்கு நேரில் ஆஜராக  டி.என்.பி.எஸ்.சி சம்மன் அனுப்பியிருந்தது.அதனைத்தொடர்ந்து, விசாரணைக்கு அழைக்கப்பட்ட 57 பேரில் 20 பேர், சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர்.

Exit mobile version