சேலம் திமுக வேட்பாளர் பார்த்திபனை கண்டித்து முழக்கம்

சேலம் மக்களவை தொகுதி வேட்பாளராக மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட பார்த்திபனுக்கு வேலை செய்ய முடியாது என கூறி கட்சி கூட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவாளர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் வீரபாண்டியாரின் ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். அவர்களை சந்திக்க வேட்பாளர் வருவதாக கூறிய நிலையில், பல மணி நேரமாகியும் வேட்பாளர் வரவில்லை. தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாச்சி மட்டுமே வந்தார். வேட்பாளர் சேலத்தில் பிரச்சாரத்தில் உள்ளதால் வரமுடியவில்லை என தெரிவித்தார். அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் எனவும் கூறினார். இதனை ஏற்காத வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவாளர்கள் கடும் ரகளையில் ஈடுபட்டனர். பார்த்திபனுக்காக வேலை செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Exit mobile version