வீட்டில் பதுக்கி வைத்திருந்த கடல்வாழ் உயிரினங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த கடல் அட்டை மற்றும் கடல் பல்லிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

அரியவகை கடல் அட்டைகள் மற்றும் கடல் பல்லிகளை பிடிக்க அரசு தடை செய்துள்ளது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள மூப்பையூரில் கடல் உயிரினங்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடப்பன் என்பவரது வீட்டில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடல் பல்லிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல்வாழ் உயிரினங்களை 500 கிலோவை கைபற்றினர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version