ரூ.20 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 20 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்லவிருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த அலி அப்பாஸ் என்பவர் தனது சூட்கேசில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version