ஓமலூர் அருகே ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்

ஓமலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 83 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் நிரப்புவதற்காக, ஒரு கோடியே 83 லட்சம் ரூபாய் வாகனத்தில் ஊழியர்கள் கொண்டு சென்றனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி இந்தப் பணம் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

வாகனத்தில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதாலும், வாகனத்தின் பதிவு எண், ஆவணத்தில் குறிப்பிடாமல் இருந்ததாலும், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்தப் பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Exit mobile version