மதுரை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 120 கிராம் தங்கம் பறிமுதல்

புர்காவில் மறைத்து கடத்தி வரப்பட்ட 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து மதுரை வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த தகவலையடுத்து, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தஞ்சையை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரது மனைவி ஹமீதா பீவியை சோதனையிட்டதில் அவர் தனது புர்காவில் மறைத்து 120 கிராம் எடையுள்ள தங்க செயினை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாகும்.

இதையடுத்து அவரிடம் இருந்து தங்கச் செயினை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். ஜெட்டாவில் இருந்து கொழும்பு வந்த அவர், பின்னர் அங்கிருந்து மதுரை வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version