சிங்கப்பூருக்கு கடத்தப்பட சுறா மீன் பாகங்கள் பறிமுதல்

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த, சுமார் நான்கரை லட்ச ரூபாய் மதிப்புடைய சுறா மீன்களின் வால்கள், இறக்கைகள், துடுப்புகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சென்னையை சேர்ந்த பஷீர் அகமது என்பவர், ஒரு அட்டைப்பெட்டியில் 8 கிலோ எடையுள்ள சுறா மீன்களின் பாகங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அவற்றை பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version