பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

சென்னை மாங்காட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 5 டன் செம்மரக் கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாங்காட்டில் உள்ள பழைய மரகுடோனில் செம்மர கட்டைகளை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் பதுக்கி வைத்திருந்த செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். குடோன் உரிமையாளர் ரஜினிகாந்த் என்பவரை குன்றத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version