ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட நில அதிர்வு

மகாராஷ்ட்ரா மாநிலம் சட்டாரா பகுதியில் இரண்டாவது முறையாக லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இன்று காலை 7. 48 மணியளவில் முதன்முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவான நிலநடுக்கத்தினால் வீடுகள், கட்டிடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்நிலையில் காலை 8.27 மணிக்கு மீண்டும் அப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3 ஆக பதிவான நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் ஏதும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Exit mobile version