வீர மரணமடைந்த வீரர்களுக்கு சேவாக் தந்த மரியாதை…

நேற்று முன்தினம் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த 40 வீரர்களின், குழந்தைகளின் கல்வி பொறுப்பு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார். தான் நடத்தி வரும் “சேவாக் இன்டர்நேஷனல் ஸ்கூல்”-லில் அவர்களின் குழந்தைகளுக்கு கட்டாயம் இலவச கல்வி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். சேவாக்கின் இந்த ஈடு இணையற்ற செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அதே போல் அரியானா போலீசில் பணியாற்றி வரும் இந்திய முன்னணி குத்து சண்டை வீரர் விஜயேந்தர் சிங் தனது ஒரு மாத சம்பளத்தை முழுவதும் உயிரிழந்த குடும்பத்திற்கு தரப்போவதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version