ராமநாதபுரம் மற்றும் பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு தீவிரம்

பெங்களூரு காவல்துறை தமிழக காவல்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், லாரி ஓட்டுநர் சுவாமி சுந்தர மூர்த்தி என்னும் பெயரில் தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஒருவர், தமிழகத்தில் இருக்கும் முக்கிய நகரங்களிலும், அண்டை மாநிலங்களிலும் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து தாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக ரயில்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், ராமநாதபுரத்தில் பயங்கரவாதிகள் 19 பேர் பதுங்கியுள்ளதாகவும் பெங்களூரு காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக காவல்துறைக்கு பெங்களூரு காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் பாலம் மற்றும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர். 

அதேபோல், சென்னை மத்திய ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

Exit mobile version