புத்தாண்டையொட்டி எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரம்

புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் வரும் ஒன்றாம் தேதி வரை தீவிர வாகன சோதனை நடத்த டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

பண்டிகை நாட்களில் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் அதிக சோதனை நடத்த உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து வரும் புத்தாண்டையொட்டி இன்று முதல் ஜனவரி ஒன்றாம் தேதிவரை தீவிர வாகன சோதனையை நடத்த டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளான வழிபாட்டுத் தலங்கள், கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையை தீவிரப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தேசிய நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் அதிகளவில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்திற்கு இடமான வகையில் பிடிக்கப்படும் நபர்கள் குறித்து உடனடியாக மேலிடத்திற்கு தகவல் அளிக்கவும் போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version