பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு

ஜம்மு காஷ்மீரின் ஜின்பன்சல் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் ஜின்பன்சல் மற்றும் சாரி ஷாரீப் பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் அதிரடி படை வீரர்கள், புத்கம் போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இதையடுத்து அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சில மணிநேரங்கள் நீடித்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியில் இருந்து ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version