சத்தீஷ்கரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு : 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

சத்தீஷ்கரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட என்கவுண்டரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுக்மா மாவட்டத்தில் உள்ள பீமாபுரம் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இந்த தாக்குதலில் மாவோயிஸ்டுகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையை அடுத்து, அப்பகுதிகளில் சோதனை மேற்கொண்ட பாதுகாப்புப் படையினர், மாவோயிஸ்டுகளின் உடல்களையும் அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். அப்பகுதியில் மேலும் மாவோயிஸ்டுகள் பதுங்கியுள்ளனரா என தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Exit mobile version