ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கும் – தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கி சண்டை : பொதுமக்கள் 7 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது, பொதுமக்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புல்வாமா மாவட்டம் சிர்னூ பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதற்கு பதில் தாக்குதல் நடத்தியதில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தததால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Exit mobile version