பாதுகாப்பு படையினருடன் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சண்டை : 2 தீவிரவாதிகள் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில், தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெஹாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது, துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பதில் தாக்குதலில், தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்கள் வசமிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இருவரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

Exit mobile version