மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

இந்துக்கள் தொடர்பான கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய கருத்தை அடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி இடைத்தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மகாத்மா காந்தியின் மரணத்தையும் இந்து மதத்தையும் ஒப்பிட்டு பேசினார். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version