உரிய அனுமதியின்றி மக்கள் நீதி மய்யம் ஆலோசனைக்கூட்டம்

திண்டுக்கல்லில் நடைபெற இருந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்திற்கு உரிய அனுமதி பெறாததால் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் திண்டுக்கல்லில் மருத்துவர் சுதாகர் போட்டியிட உள்ளார். இந்நிலையில், தாடிக்கொம்பு சாலையில் தனியாருக்கு சொந்தமான குடோனில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கூட்டத்தையொட்டி கட்சி நிர்வாகிகள் அதிகளவில் குழுமியிருந்த நிலையில், கூட்டம் நடத்த உரிய அனுமதி பெறவில்லை எனக்கூறி, அங்கு வந்த போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கூட்டம் நடத்த அனுமதி மறுத்து, நிர்வாகிகளை உடனடியாக கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து தொண்டர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடத்த முற்பட்டது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version