பாதுகாப்பு படை, தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு : தீவிரவாதிகள் 6 பேர் பலி

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற சண்டையில் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் உள்ள ஹெப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றோரு இடத்தில் நடைபெற்ற சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழந்தனர்.

Exit mobile version