சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

நாடு முழுவதும் வரும் 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் 74வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலாத்தளங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்தாண்டு சுதந்திர தின விழாவுக்கான வழிகாட்டு நெறிமுகளை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி, பல்வேறு மாநில அரசுகளும் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றன. அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையில், டெல்லி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில், காவல்துறையினருடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version