வாக்குச்சாவடியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் அராஜகம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அராஜகத்தில் ஈடுபட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினரை தட்டிகேட்ட மெகா கூட்டணியினர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கத்தை அடுத்த குப்பநத்தத்தை சேர்ந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இளைஞர்கள் சிலர், கொட்டாவூர் வாக்குச்சாவடியில் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தட்டிக்கேட்ட மெகா கூட்டணி நிர்வாகிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த இளைஞர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட குப்பநத்தத்தை சேர்ந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் கொட்டாவூரில் பிரச்சினையில் ஈடுபட்டனர். தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து குப்பநத்தத்தை சேர்ந்தவர்களை கைது செய்யக்கோரி, கொட்டாவூர் இளைஞர்கள் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கிருந்து கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பிரச்சினையில் ஈடுபட்ட குப்பநத்தம் இளைஞர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Exit mobile version