இந்திய அணி அதிரடி ஆட்டம்: மே.தீவுகள் அணிக்கு 171 ரன்கள் இலக்கு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது இருபது ஓவர் போட்டியில், டூப்  மற்றும் ரிசப் பண்ட்-ன் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அதிரடியாக 170 ரன்கள் குவித்தது.

இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற தீவிரமாக உள்ளது. அதேபோல், தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி உள்ளது. தற்போது பேட்டிங்கை தொடங்கியுள்ள இந்திய அணியில் தொடக்க ஆட்டகாரர்கள் ரோகித் சர்மா 15 ரன்களும், கே.எல்.ராகுல் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டூப் அதிரடியாகி ஆடி அரை சதமடித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் கேப்ட விராட் கோலி 19 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிக்கட்டத்தில் ரிசப் பண்ட் அதிரடியாக ஆடி  33 ரன்கள் ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் கெஸ்ரிக் வில்லியம்ஸ், வால்ஸ் ஆகியோர் தலா 2  விக்கெட்டுகளும், காட்ரெல், பிர்ரெ, ஹோல்டர் 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர் .

 

 

Exit mobile version