அனுமதியின்றி செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார்களுக்கு சீல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 6 டாஸ்மாக் பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி திருப்போரூர் ரவுண்டானா, திருப்போரூர் பேருந்து நிலையம் கண்ணகப்பட்டு கிராமம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதேபோல தண்டலம் ரோடு, கேளம்பாக்கம் கிராமம், தையூர் கிராமம் ஆகிய இடங்களில் உள்ள பார்களுக்கும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்அய்யாவு,செங்கல்பட்டு கோட்டக் கலால் அலுவலர் ஏழுமலை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சீல் வைத்தனர்

Exit mobile version