News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

தவணை செலுத்தாததற்காக வசை – தனியார் நிதிநிறுவனத்தினர் அடாவடி

Web Team by Web Team
September 22, 2020
in தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
தவணை செலுத்தாததற்காக வசை – தனியார் நிதிநிறுவனத்தினர் அடாவடி
Share on FacebookShare on Twitter

தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள், கடன் தவணை செலுத்தாத வீட்டின் உரிமையாளர்களை தகாத வார்த்தைகளால் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விருதுநகர் மாவட்டம், ராமமூர்த்தி சாலையில் “ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ்” என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் விருதுநகர் அய்யம்மாள் நகரை சேர்ந்த செந்தில்குமார் எனபவர் தனக்கு சொந்தமான இடத்தை அடமானம் வைத்து ரூ.2,10,000 ஆயிரம் கடன் பெற்று இருந்தார். அதற்காக 5 ஆண்டுகளாக மாதத் தவணையும் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா காரணமாக வருமானம் இல்லாததால் கடந்த மாதம் செந்தில்குமாரால் தவணை கட்ட முடியவில்லை. இதையடுத்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர், இரவு 8 மணிக்கு மேல் செந்தில்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி தனியாக இருந்த சமயத்தில் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் நிதிநிறுவனத்திற்குச் சென்று எதற்காக இரவு நேரத்தில் வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார். தவணை தேதியான 10 ஆம் தேதிக்கு வராமல், முன்கூட்டியே 6 ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல், மனைவி தனியாக இருக்கும் சமயத்தில் பணத்தை கேட்டது எதனால் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு நிதி நிறுவனப் பணியாளர்கள் “நாங்கள் கந்துவட்டிக்கு தான் பணம் வழங்குகிறோம்; உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்” என்று செந்தில்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கின்றனர்.

காவல்நிலையத்தில் இது குறித்து செந்தில்குமார் புகார் அளித்திருக்கிறார். தனியார் நிதிநிறுவனப் பணியாளர்களின் அராஜக போக்கு, கடன் வாங்கியவர்களை மன அழுத்ததிற்கு ஆளாக்கி குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது. கொரோனா காலத்தில் தமிழக அரசும், மத்திய அரசும் தவணை காலங்களை நீட்டித்து உத்தரவிட்டிருந்தாலும். இதுபோன்ற தனியார் நிதி நிறுவனங்களின் அராஜக போக்கும் அரங்கேறி வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

Tags: ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ்கடன் தவணைதனியார் நிதி நிறுவனம்விருதுநகர்
Previous Post

தீபிகா படுகோனுக்கும் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பா? – மேலாளருக்கு விசாரணை அழைப்பாணை

Next Post

நின்றுகொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியது – 3 பேர் உயிரிழந்த பரிதாபம்

Related Posts

அதிமுக வெற்றிக்கு ராஜபாளையம்தான் அச்சாரமாக இருக்கும்: முதல்வர் பேச்சு
TopNews

அதிமுக வெற்றிக்கு ராஜபாளையம்தான் அச்சாரமாக இருக்கும்: முதல்வர் பேச்சு

March 27, 2021
போராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக!
TopNews

போராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக!

January 12, 2021
ஓடையில் குளிக்கச்சென்ற போது நடந்த விபரீதம்!
TopNews

ஓடையில் குளிக்கச்சென்ற போது நடந்த விபரீதம்!

November 20, 2020
கிராம சபைக் கூட்டத்திற்கு வந்த மூதாட்டியை அடித்த தி.மு.க. நிர்வாகி!
TopNews

கிராம சபைக் கூட்டத்திற்கு வந்த மூதாட்டியை அடித்த தி.மு.க. நிர்வாகி!

October 3, 2020
விருதுநகர் மாவட்டத்தில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்  கருத்தரங்கம்
செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் கருத்தரங்கம்

March 16, 2019
எலுமிச்சை அதிக விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லை : விவசாயிகள் வேதனை
செய்திகள்

எலுமிச்சை அதிக விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லை : விவசாயிகள் வேதனை

February 8, 2019
Next Post
நின்றுகொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியது – 3 பேர் உயிரிழந்த பரிதாபம்

நின்றுகொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியது - 3 பேர் உயிரிழந்த பரிதாபம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version