பள்ளிகள் நாளை திட்டமிட்டபடி திறக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை

வாக்கு எண்ணிக்கை தாமதமானலும், பள்ளிகள் நாளை திட்டமிட்டபடி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதால், விடுமுறையை ஜனவரி 4ஆம் தேதி ஒத்திவைத்தது. இதனையடுத்து, வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், பள்ளிகள் திறக்கப்படுமா என சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், பள்ளிகள் நாளை திட்டமிட்டபடி திறக்கப்படும் என பள்ளிக்கல்விதுறை இயக்குநர் கண்ணப்பன் விளக்கமளித்துள்ளார்.
 

Exit mobile version