காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

காலாண்டு விடுமுறை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் மற்றும் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வுகள் கடந்த 12ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற்றது. அதன் பிறகு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

அதன்படி நேற்றுடன் காலாண்டு விடுமுறை முடிவடைந்தது. இதையடுத்து அனைத்துப் பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன. பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், மாணவர்களின் இரண்டாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

Exit mobile version