காதலிப்பதாகக் கூறி பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை

நாகப்பட்டினத்தில், பள்ளி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த இருவர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை ,கூறைநாடு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி ஒருவரை காதலிப்பதாகக்கூறி, அவரைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மாணவியைத் தொடர்ந்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், சந்தோஷ், அவருடைய நண்பர் கண்ணனுக்கும் மாணவியின் வீடியோவை அனுப்பி உள்ளார். இதையடுத்து, கண்ணனும், அந்த மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இந்த விவரங்கள் மாணவியின் பெற்றோருக்குத் தெரியவந்தது. அதில், மனமுடைந்த அவர்கள் சைல்டு ஹெல்ப் லைன் உதவியுடன், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரைப் பெற்ற மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்துறையினர், சந்தோஷ், கண்ணன் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி அவர்களை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version