பள்ளி மாணவனின் தலையில் கல்லை போட்டு கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள ஏரியில் 12 ஆம் வகுப்பு மாணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

ராசிபுரம் அருகேயுள்ள அல்லேரி முனியப்பன் கோவில் அருகே உள்ள ஏரியில் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, முகம் சிதைந்த நிலையில், ஆண் சடலம் இருந்தது.

இதனையடுத்து சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிரிழந்தவர் ஏற்காட்டை சேர்ந்த பள்ளி மாணவன் வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் கொலை செய்த மர்ம நபர் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Exit mobile version