போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் – பள்ளிக் கல்வித்துறை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பவில்லை என்றால், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ அமைப்பின் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்புக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், நாளைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால், 28 ஆம் தேதி திங்கட்கிழமை முதல், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் பள்ளி கல்வி துறை கூறியுள்ளது.

போராட்டத்தைக் கைவிடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பான சுற்றறிக்கை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version