வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலைநிறுத்தம்

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து தனது அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து, கடந்த 27ம் தேதி டெல்லியில் நிதித்துறை மற்றும் வங்கி தலைமை அதிகாரிகளுடன் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. போராட்டம் அறிவிப்பின் படி, இன்றும் நாளையும் நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் இன்றும், நாளையும் வங்கிகள் இயங்காது. மேலும், வரும் 2ம் தேதி வார விடுமுறை என்பதால், மூன்று நாட்களுக்கு வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version