பிஎஸ்என்எல் ஊழியர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தம்

15 சதவிகித ஊதிய உயர்வுடன் மூன்றாவது ஊதிய மாற்றத்தை வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை பிஎஸ்என்எல் ஊழியர்கள் நாடு முழுவதும் தொடங்கியுள்ளனர்.

தொலைத்தொடர்பு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர். வேலையை புறக்கணித்தும் முக்கிய நிர்வாகிகள் அலுவலக வாயிலில் அமர்ந்து அறவழியில் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக 4ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் சென்னையில் பூக்கடை பஜாரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் மற்றும் கிரீம்ஸ் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வாயிலில் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version