நல்லாசிரியர் விருதுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பெயர்களை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

நல்லாசிரியர் விருது பெறத் தகுதியான ஆசிரியர்களின் விவரங்களை அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு நல்லாசிரியர் விருதுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தநிலையில் நல்லாசிரியர் விருதுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பெயர்களை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. விருது பெறத் தகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக சுய ஒழுக்கம், நேரம் தவறாமை, மாணவர் மற்றும் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க பாடுபட்டவர்கள், அரசியல் கட்சி சாராதவர்கள் உள்ளிட்ட 17 தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பொய்யான தகவல்களை அளிக்கும் தேர்வுக் குழு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் ஆசிரியர்களின் விவரங்களை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version