அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. வரும் 23ந் தேதியுடன் முடியும் அரையாண்டுத் தேர்வின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள், கவனமாக செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்கள், மற்ற ஆசிரியர்கள் கொண்டு மறுகூட்டலுக்கு உட்படுத்த வேண்டும் என்றும், சரியான முறையில் மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version