ஊட்டியில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லையென்றாலும் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் எமரால்டு உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் ஓரளவு மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால், கடும் குளிர் நிலவுகிறது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்

Exit mobile version