தொடர் கனமழை காரணமாக கோவை-நீலகிரியில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், தொடர் கனமழை காரணமாக, கோவை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று நீலகிரி மாவட்டத்திலும் கனமழை தொடர்ந்து கொட்டி வருகிறது. இதனால், நிலச்சரிவு உள்ளிட்ட சம்பவங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version