முதல் நாளில் மாணவர்களுக்கு பயிர் விதைகள் வழங்கிய பள்ளி நிர்வாகம்

நெல்லை மாவட்டம் தென்காசி தனியார் பள்ளியில் முதல் நாள் வகுப்புக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு பயிர் விதைகள் வழங்கப்பட்டன. 

தமிழக அரசு மரங்கள் வளர்ப்பது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் தென்காசி தனியார் பள்ளி மாணவ மாணவியருக்கு மரம் வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மழையை உருவாக்கும் மரங்களுடைய விதைகள் தோட்டக் கலைத் துறை சார்பாக வழங்கப்பட்டன. மேலும் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்கிற உறுதி மொழியையும் மாணவ மாணவியர் ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவியருடன் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

Exit mobile version