தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் புதுவையில் 2 மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கஜா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் புதுவையில் 2 மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், சிவகங்கை,தேனி,மதுரை மற்றும் கரூர், திண்டுக்கல், திருப்பூர், விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version