விமான போக்குவரத்து பொது இயக்குநர் நியமனத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

விமான போக்குவரத்து பொது இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சிபிஐ சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா மீது ஊழல் புகார் எழுந்ததை அடுத்து, அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி அவரை விமான போக்குவரத்து துறையின் பொது இயக்குநராக மத்திய அரசு நியமித்தது. இதை எதிர்த்து, மூத்த வழக்கறிஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Exit mobile version