விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு என்ன?: உச்ச நீதிமன்றம்

அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வாய்ப்பு உள்ளதா? என்பதை தெரிவிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற இரண்டரை முதல் 5 ஏக்கர் நிலம் வரை உள்ள சிறு குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல, அனைத்து விவசாயிகளின், விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையின் போது, விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில், தமிழக அரசின் முடிவு என்பது குறித்து பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Exit mobile version