23 வீரர்களின் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்த எஸ்பிஐ

பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த 23 வீரர்களின் கடனை தள்ளுபடி செய்வதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், ராணுவ வீரர்கள் மீது நடத்தப்படட கொடூர தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்நிகழ்வு  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த 23 ராணுவ வீரர்களின் கடனை, தள்ளுபடி செய்வதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்திருக்கிறது. 23 வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கவும் எஸ்பிஐ உத்தரவிட்டிருக்கிறது.

 

Exit mobile version