எஸ்பிஐ வங்கியில் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் – டெல்லியில் பதுங்கியிருந்த கொள்ளையன் சிக்கினான்

பல்லடம் அருகே எஸ்பிஐ வங்கியில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் டெல்லியில் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளிபாளையம் எஸ்பிஐ வங்கியில், கடந்த 24ம் தேதி 500 சவரன் நகைகள், 18.5 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொள்ளையர்களை பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இக்கொள்ளை சம்பவத்தில் டெல்லியில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

 

Exit mobile version