கோவையில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு, அதிமுக சார்பில் மதிய உணவு வழங்கும் திட்டம்!

கோவையில், கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மதிய உணவு வழங்கினார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தினம்தோறும், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு, அதிமுக சார்பில் சத்தான மதிய உணவு வழங்கப்படுகிறது.

அதன்படி விராலியூர், நரசிபுரம், வெல்லிமலைபட்டினம், ஏ.டி காலனி, பட்டியார் கோவில்பதி, மடக்காடு, தானிக்கண்டி உள்ளிட்ட பகுதிகளில் மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, அனைவருக்கும் சத்தான அசைவ உணவை வழங்கினார்.

அதேபோல, அனைவருக்கும் கபசுர குடிநீர், முகக்கவசம், கிருமிநாசினிகளும் வழங்கப்பட்டன.

Exit mobile version